ஆத்மமே, உன் ஆண்டவரின்

1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று.

2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி;
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி;
அல்லேலுயா, அவர் உண்மை
மா மகிமையாம் துதி.

3. தந்தை போல் மா தயை உள்ளோர்;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!
அல்லேலுயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே,
நாற்றிசையும் நின்றெழுத்து
பணிவர் நீர் பக்தரே;
அல்லேலுயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.