ஆ இன்ப இல்லமே!

1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
தழைத்து வாழ்க;
அன்புடன் பாலர் யாரும் அங்கு
ஐக்கியமாய் ஓங்க;
அன்னை தந்தை
ஆவலாய்ப் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க.

2. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்
சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
உகந்து செய்ய;
பக்தியுடன்
பற்பல சேவை ஆற்றி,
கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

3. ஆ இன்ப இல்லமே! நன்மை
பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ
நன்றியுடன் போற்று;
துன்பம் துக்கம்
துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு.

4. ஆ இன்ப இல்லமே! உன்
உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
என்றும் நடத்தும்;
இவ்வாழ்வின்பின்
உன் மக்களை அவரே
விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.