ஆ இயேசுவே, நான் பூமியில்

1. ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.

2. அவ்வாறென்னை இழுக்கையில்,
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்,
அநந்த நன்மைக்குட்படும்.

3. தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
சகிப்பவன் சந்தோஷிப்பான்.

4. பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.