நீர் தந்த நன்மை யாவையும்


1. நீர் தந்த நன்மை யாவையும்
நினைத்து, கர்த்தரே,
மகிழ்ச்சியோடு என்றைக்கும்
நான் துதி செய்வேனே.

2. குழந்தைப் பருவமுதல்
குறைவில்லாமலே
எனக்களித்த நன்மைகள்
ஏராளமானதே.

3. என்னோடு வாலிபத்திலும்
இருந்தீர் தேவரீர்;
இக்கட்டுண்டான காலத்தும்
விழாமல் தாங்கினீர்.

4. அநேகமான தீமைகள்
அண்டாமல் தடுத்தீர்;
கைம்மாறில்லாத நன்மைகள்
கர்த்தாவே, பொழிந்தீர்.

5. இம்மையில் என்றும் தாழ்மையாய்
தெய்வன்பை நினைப்பேன்;
மறுமையில் வணக்கமாய்
உம்மையே போற்றுவேன்.

6. புகழ்ச்சி, துதி, தோத்திரம்,
ஒன்றான உமக்கே
இகத்திலும் பரத்திலும்
எழும்பத் தகுமே.