உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல (2)
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) –-- ஏல்

வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) --- ஏல்