எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு
நேராக என் கண்களை ஏறெடுப்பேன்

வானம் பூமி உண்டாக்கின - கர்த்தரிடம்
எனக்கு ஒத்தாசை வந்திடுமே

1. உன் காலைத் தள்ளாடவொட்டார்
உன்னைக் காக்கிறவர் உறங்கார்
இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர்
உறங்குவதில்லை, தூங்குவதுமில்லை --- வானம்

2. கர்த்தர் எல்லாத் தீங்குக்கும் விலக்கி
உன் ஆத்துமாவையுங் காப்பார்
உன் போக்கையும் வரத்தையுமே
இது முதற்கொண்டு என்றைக்கும் காப்பார் --- வானம்