1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை
ஓ... நித்தியமானவரே --- (2)

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்

உம்மை என்றும் ஆராதிப்பேன் --- (2)

2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2)

3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2)