ஒவ்வொரு நாளும் உமக்குள்ளே நானும்
வல்லமையோடு வாழனுமே
வாழனுமே உம்மில் வளரணுமே

என் இயேசுவே உம் கரங்களில் தாங்கிடும்
உம் பிள்ளை என்னையே ஏந்திடும்

இரட்சகா உமக்குள் வேறூன்றி நாளும்
வரங்களால் கனிகள் தரணுமே
தரவேணுமே பெலன் பெற வேணுமே --- என் இயேசுவே

என் அஸ்திபாரம் கன்மலை நீரே
என் வாழ்வை உமக்குள் கட்டிடுவேன்
குடியிருப்பேன் உம்மில் நிலைத்திருப்பேன் --- என் இயேசுவே