மன்னவன் கரம் பிடித்தால்

மன்னவன் கரம் பிடித்தால்
மகிழ்ச்சி கரை புரளும்
பொன்னைப் போல் ஒளி வீசும்
துன்பமில்லை இனி என்றும்

1. எந்தன் வாழ்வு முழுவதையும்
அவர்க்காக தந்து விட்டேன்
அந்த நாளில் இருந்து என்னை
கண்ணைப் போல காக்கின்றார்

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே

2. அவர் என்னை தேடி வந்தார்
நன்மை செய்ய ஓடி வந்தார்
அவர் அன்பு கூர வந்தார்
அவர் போல யாரும் இல்லை

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே

3. எந்தன் சுவாசம் அவராலே
எந்தன் பேச்சும் அவராலே
கவிப்பாடல் அவர்க்காக
புனைந்தேனே நான் பாட

எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே