அன்புள்ள இயேசையா இயேசையா
உம்பிள்ளை நான் ஐயா இயேசையா
ஆனந்த ஒளி பிறக்கும் வாழ்வெல்லாம் வழி திறக்கும்

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்