கர்த்தரை தெய்வமாக கொண்டோம்
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
அவரையே ஆதரவாய் கொண்டோம்
நடுவழியில் நின்று போவதில்லை

வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானரே

ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்

வெறுமையானதை முன்னறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறிக்கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே

ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்

வாக்குத்தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூடவந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே