அன்பை நாடுவோமா இணை அன்பு
ஆண்டவர் நம்மேல் வைத்தனை அன்பு
தேவ ரகசியங்களை அறியும்
தீர்கதரிசியாய் இருந்தாலும்

1. பல பல பாஷைகள் பேசும்
மலை பெயர்க்குமாம் விசுவாசம்
சகல ஞான அறிவும் சிறிது
சகோதர அன்பே பெரிது

2. தன் பொருள் ஈந்தளித்தாளும்
தன் சரீரம் சுட கொடுத்தாலும்
தானதர்மம் யாவும் சிறிது
தமையனின் அன்பே பெரிது

3. சாந்தம் சகல தயவு உள்ளது
தாங்கும் தேவ தயவு பெற்றது
புகழ் இறுமாப்பு பொறாமை
பகை நியாய பாவம் செய்யாது

4. அன்பில்லாதவன் தேவனை அறியான்
தேவன் அன்பாக இருக்கிறார்
அன்பில் ஏதும் பயமே இல்லை
அன்பு என்றும் ஒழிவதும் இல்லை

5. விசுவாசம் நம்பிக்கை அன்பு
இம்மூன்றும் நிலைத்திருக்கிறது
இவைகளில் அன்பே பெரிது
இதை உலகில் காண்பதும் அரிது