இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுமே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதில்லை தம் ஆலோசனை
கோர பயங்கர காற்றடித்தும்
கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் --- நெஞ்சமே

3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்திடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலே
ஜெய கம்பீரமே உனக்குண்டே --- நெஞ்சமே

4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் --- நெஞ்சமே

5. ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில்
என்றும் அழிந்திட விட்டு விடார்
தம் சமூகம் நித்திய பேரின்பமே
சம்பூரண ஆனந்தம் பொங்கிடுமே --- நெஞ்சமே

6. அங்கே அநேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே --- நெஞ்சமே