எந்தன் உள்ளம் புதுக்கவியாலே

1. எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
அவரையே நேசிக்கிறேன்

பல்லவி

அல்லேலுயா துதி அல்லேலூயா -- எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே --- அல்லேலூயா

3. சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே --- அல்லேலூயா

4. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே யானாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே --- அல்லேலூயா

5. களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் --- அல்லேலூயா