அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க இயேசு துடிக்கின்றார்
கவலை ஏன் கலக்கம் ஏன் கர்த்தர் இயேசு அழைக்கின்றார்
1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள் --- கல்வாரியின்
2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உபடுக்கையோ
கலங்காதே மன்னன் ஏசு பார் --- கல்வாரியின்
3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதோ
மரணம் வென்ற ஏசு பார் --- கல்வாரியின்