தூயாதி தூயவரே!

பல்லவி

தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

அனுபல்லவி

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் --- தூயாதி

சரணங்கள்

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! --- பாரில்

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! --- பாரில்

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! --- பாரில்

4. பரலோகில் இடமுன்று என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! --- பாரில்