என் இதயம் யாருக்கு தெரியும்

பல்லவி

என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும் - (2)

சரணங்கள்

1. நெஞ்சின் நோகங்கள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே - (2)

2. சிறகு ஒடிந்த நிலையில்
பறவை பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ - (2)

3. மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ - (2)

4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே - (2)