நீ இறைவனை தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னை தேடுகிறான்
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்

1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
நீதியை பூமியில் விதைத்திடுங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்

2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்த்திடுவார்