பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது

1. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே --- பொங்கி

2. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம் --- பொங்கி