நான் உம்மை உறுதியாக
என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய்
அளித்து என்றும் நடத்திடுவீர்

1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
என் ஆவி உம்மைத்தேடும்
உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர் --- நான்

2. நல் வாசல்கள் திறந்திட
உம தாசர் உள்ளே செல்வார்
தேவனே ராஜனே
ஜெயமதைத் தந்திடுவீர் --- நான்

3. என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர்
சமாதானம் அருள்வீர் --- நான்

4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம் --- நான்