சிலுவை ஏன் அவர்க்கு
சிறு குற்றமும் செய்யாதவர்க்கு
சிலுவை ஏன் அவர்க்கு
சிலுவை ஞானம் தேவ ஞானம்
மற்றதெல்லாம் உலக ஞானம்
சிலுவை ஏன் அவர்க்கு
1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை
குனிந்து கரத்தால் அவனை தொட்டு
குரோதத்தை மாற்றினதாலோ - சிலுவை ஏன்
2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து
இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது
இயேசுவை கண்டவர் எல்லாம்
ஏதும் குற்றம் இல்லை என்றார் - சிலுவை ஏன்
3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து
சிலுவையில் மரித்ததாலே
இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் - சிலுவை ஏன்