பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்

1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
கருத்துடன் துதியுங்கள் --- பூமியின்

2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
என்றென்றும் துதியுங்கள் --- பூமியின்

3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
படைத்தோனை துதியுங்கள் --- பூமியின்