உருகாயோ நெஞ்சமே

பல்லவி

உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோபார்
கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே

சரணங்கள்

1. திண்டு போல எண்டிசையின்
தொண்டர் பாவம் ஆண்டான் மேலே
நின்றதே ஓர் பண்டு ஏவை
தின்ற சாபம் மண்டுதே!

2. தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்!

3. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்!
புல்லரிதோ நன்றி கெட்டு
புறம்பாக்கினாரன்றோ!

4. மன்னுயிர்க்காய் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனார்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குரு சேறினார்!

5. மூவுலகும் தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்!

6. நித்திய காலம் பாத்திரராய்
நீசர் வாசஸ்தலம் உய்ய
சத்திய தாசர் சித்தமேவும்
சங்கை ராஜன் இங்கு பார்!