இன்று வரை என்னை நடத்தினீர்
இன்றுவரை என்னை தாங்கினீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்
நீர் என்றென்றும் போதுமானவர்

எந்தன் பாவ பாரமெல்லாம்
உந்தன் மீது சுமந்து கொண்டீர்
எனக்காய் சிலுவை மரித்தீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

எந்தன் தேவைகள் அறிந்து
வானம் திறந்து தந்திட்டிரே
எல்லால் சம்பூரணமாய் நல்கிறீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

மன பாரத்தால் நான் அலைந்தேன்
மன வேதனையால் நிறைந்தேன்
மனம் உருகி நான் கதறும் போது
இயேசுவே நீர் மிக நல்லவர்

கடும் வியாதி வந்த வேளையில்
வைத்தியராகி என்னை தேற்றினீர்
கடும் வெயிலும் நல் நிழலானீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

ஒருநாளும் கைவிடீர் நீர்
ஒருநாளும் விலகிடீர் நீர்
ஒருபோதும் மறக்க மாட்டீர்
இயேசுவே நீர் உண்மையுள்ளவர்