மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டு - (2)

ஆபிரகாமின் தேவன் - அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் - அவர்
நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) --- ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) --- ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) --- ஆபிரகாமின்