உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே - இயேசு (2)

சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி
துதியே கனமே மகிமை செலுத்து! (2)
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2)

1. வாக்கு மாறாதவரே இயேசு
சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே --- சீயோனே

2. சுத்த திருச்சபையே பறை
சாற்றிடு நற்செய்தியை
சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் --- சீயோனே

3. பாலகர் வாயினிலே - துதி
பாடல்கள் முழங்குதே
போற்றிப் பாடும் வாயை அடக்கக் கூடாதே --- சீயோனே

4. தள்ளினோம் ஆகாதென்றே - ஆனார்
தலைக்கு மூலைக்கல்லாய்
ஸ்திரமாய் கர்த்தர் மேல் வாழ்க்கையைக் கட்டுவோம் --- சீயோனே

5. அன்றாடகம் என்னுடன் - பேசி
அன்பாய் விசாரிக்கின்றார்
என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே --- சீயோனே

6. நம்பிக்கையுள்ள வல்ல - ஜீவ
நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் --- சீயோனே