மன்னவா மீட்க வந்த ஜோதியே
எனக்காய் மரித்த நாயகா
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
மன்னவா மீட்க வந்த ஜோதியே

1. புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி
அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமே
செல்லும் தேவா செல்லும் தேவா

2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலுமே நான் பயப்படேனே
தேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா

3. உந்தன் வீட்டில் நான் களிப்புடனே
நித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்க
சேரும் தேவா சேரும் தேவா