பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்
1. நாதனே, துங்கமெய் - வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ்செய்ய --- பாதம்
2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்தஉன் --- பாதம்
3. வீசும் கமழ் கொண்ட - வாசனைத் தைலத்தை
ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த பொற் --- பாதம்
4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த நற் --- பாதம்
5. நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த உன் ---பாதம்
6. பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு - நாதனே, என்றும் உன் --- பாதம்