நெஞ்சே நீ கலங்காதே

பல்லவி

நெஞ்சே நீ கலங்காதே; - சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே; - நான் என் செய்வேனென்று.

அனுபல்லவி

வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் --- நெஞ்சே

சரணங்கள்

1. பட்டயம், பஞ்சம் வந்தாலும், - அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும்,
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் --- நெஞ்சே

2. சின்னத்தனம் எண்ணினாலும் - நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும்,
வந்தணாப்பினாலும் --- நெஞ்சே

3. கள்ளன் என்று பிடித்தாலும், - விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில்
அலைமொதினாலும் --- நெஞ்சே