எந்நாளுமே துதிப்பாய்

பல்லவி

எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய்!

அனுபல்லவி

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த;
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது

சரணங்கள்

1. பாவங்கள் எத்தனையோ - நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி

2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால்

3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால்

4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே,
பூமிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது

5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே

6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு?
எந்த வேளையும் அவரோடு தங்கினால்,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே