வாரும், எமது வறுமை நீக்க

பல்லவி

வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!
மழைதாரும், ஜீவனே.

சரணங்கள்

1. பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே; வெகு
கெடும் நீண்டதே. --- வாரும்

2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே; மிகக்
கஷ்டம் ஆச்சுதே. --- வாரும்

3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே; மிகக்
கஷ்டம் ஆச்சுதே. --- வாரும்

4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா; நரர்
தயங்கிறோம் மெய்யாய். --- வாரும்

5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே; எங்கள்
தயங்கல் தீருமே. --- வாரும்