கண்டேனென் கண்குளிர

பல்லவி

கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று

அனுபல்லவி

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்

சரணங்கள்

1. பெத்தலேம் - சத்திர முன்னணையில்
உற்றோருக் - குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்

2. தேவாதி - தேவனை, தேவசேனை
ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்

3. பாவேந்தர் - தேடிவரும் பக்தர் பரனை,
ஆரேந்தர் - அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான்

4. முத்தொழிற் - கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக்

5. மண்ணோர் - இருள்போக்கும் மாமணியை,
விண்ணோரும் - வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக்

6. அண்டி னோர்க் - கன்புருவாம் ஆரணனை,
கண்டோர்கள் - கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக்

7. அன்னையாம் - கன்னியும் ஐயனுடன்
முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்