கர்த்தர்: நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்.
Tamil Christian Worship


ஏற்றகாலத்தில் நடப்பிப்பேன்

நிசேயா விசுவாசப் பிரமாணம்

விசுவாசப் பிரமாணம்

Psalm of the Day

Live Worship

வானும் புவியும் வையகமும்

வானும் புவியும் வையகமும்
வனைந்த வல்ல பரனான
வானக தந்தையே நம்புகிறேன்

அவரொரே திருமகன் கன்னியிடம்
அனைவரின் நாதர் கிறிஸ்துவுமாய்
அவதரித்ததையும் நம்புகிறேன்

பிலாத்துவின் கீழவர் சிலுவையத்தில்
பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி
பெருங்குழி புகுந்ததை நம்புகிறேன்

உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள்
உயரே எழுந்து பரன் வலமே
உடனிருப்பதையும் நம்புகிறேன்

உயிருள்ளோரும் இறந்தோரும்
உண்மையாம் தீர்ப்பை அடைந்திடவே
உறுதியாய் வருவார் நம்புகிறேன்

தூயாவி தூயோர் சபை உறவு
பாவ மன்னிப்பு உடல் உயிர்ப்பு
மெய் நிலை வாழ்வையும் நம்புகிறேன்



துதிப் பாடல்கள்

அழைப்பின் குரல் கேட்டேன்

அரணும் கோட்டையும்

அனுதினமும் உம்மில் நான்

இதுவரை செய்த செயல்களுக்காக

உன் இதயம் எந்தன் வீடென்றார்

கிருபை இரக்கம் நிறைந்தவோர்

தெய்வத்துவத்தின் பரிபூரணம்

பாடுகின்றேன் நான் பாடுகின்றேன்

யோர்தானை கடக்கும் விசுவாசி

மாமலை மீதினில்